ஆறு கவிதைகள்

இரைதேடி
வான் விழுங்கி
வயிற்றில் நெருப்பாக்கி
கடல் விழுங்கி
கிணற்று நீராக்கி
கண்ணீரின் உப்பையுண்டு
காடுவிளைவித்த பூமி
வெண்ணீரைக் கொட்டி
விரல் நீட்டியது.
இன்னும் பசி இன்னும் பசியென.
இடுக்கிடுக்கே வாய் பிளந்து
இறையை, மனிதரை
உண்டுப்பெருத்தது.
பெண்ணென்பார் பூமியை..
பொறுத்த பின்னர்
வெடிக்கத்தான் வேண்டும்.

-2002 குஜராத் சம்பவத்திற்குப் பிறகு
நன்றி: பறத்தல் அதன் சுதந்திரம்

வழியை யாரோ மாற்றி வைத்து விட்டார்கள்
கள்ளுண்டவளானேன் நான்.
கனக்குது இதயம்.
கைக்கெட்டாமல் போன
வானத்தினடியில்
கொட்டாவிவிட்டுக் கொண்டிருக்கும்
இந்த கிழட்டு மரக்குயில்கள் கண்டு
“சொர்க்கத்துக் குயில்கள்
நீயின்றி அமைதி காக்கின்றன’
என்று பிரெஞ்சுப் பழமொழி
பேசுகிறாள் தோழி.
சொர்க்கத்தைத் தேட வேரோடிப்போன
இந்த வழியில்தான்
காணாமற்போனது கானகம்.
மனது நிறைய கானகம் கொண்டு
வழி மறந்தேன் நான்.
மாற்றி வைத்த [...]